357. யாழ்வென்றி

(வ - று.)
பாலை படுமலை பண்ணி யதன்கூட்டம்
கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்- வேலைச்
சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த
அவையெலா மாக்கி யணங்கு.

(இ - ள்.) படுமலைப்பாலையும் அல்லாத பாலைகளையும் ஆக்கி அழகு செய்த சிறிய யாழைத் தன் கையிலே கொண்டபின்பு , முன்பு சொன்ன திரிபாலைத்திறமெல்லாம் அமுதச்சுவைதோன்ற வாசித்தாள், சுற்றிய அவையினுள்ளாரையெல்லாம் தன்வசத்தாராக்கி அணங்கு எ-று.

அணங்கு எழீஇயினாள்.

(15)