361. பிடி வென்றி

(வ - று.)
குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வாய்
அவளொடு மாமையாப் பான - இவளொடு
பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப்
பேணிப் பெயர்ந்தாள் பிடி.

(இ - ள்.) செங்கழுநீர்மலரை யொத்த நெடிய பெரிய கண்ணினையும் கூரிய எயிற்றினையும் சிவந்த வாயினையுமுடைய சீதேவியுடன் நிறமொத்த இவளோடு தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பரிகரித்துப் பிடிபோல அசைந்து பெயர்ந்து ஆடுங் கூத்தை ஆடினாள். எ-று.

இனிப் பெயர்த்தாளென்று பாடமோதிப் பிடியை நடத்தினாளென் பாருமுளர்.

(19)