(வ - று.) குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வாய் அவளொடு மாமையாப் பான - இவளொடு பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தாள் பிடி. (இ - ள்.) செங்கழுநீர்மலரை யொத்த நெடிய பெரிய கண்ணினையும் கூரிய எயிற்றினையும் சிவந்த வாயினையுமுடைய சீதேவியுடன் நிறமொத்த இவளோடு தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பரிகரித்துப் பிடிபோல அசைந்து பெயர்ந்து ஆடுங் கூத்தை ஆடினாள். எ-று. இனிப் பெயர்த்தாளென்று பாடமோதிப் பிடியை நடத்தினாளென் பாருமுளர். (19) |