1செற்றார்மேற் செலவமர்ந்து கொற்றவா ணாட்கொண்டன்று. (இ - ள்.) பகைவர்மேல் எடுத்துவிடுதலை விரும்பிய வெற்றியினையுடைய வாளைப் புறவீடு விட்டது எ-று. (வ - று.) அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னன் எறிந்தில கொள்வா ளியக்கம் - அறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு 2நன்பகலுங் கூகை நகும். (இ - ள்.) சோதிடநூல் வல்லவர் தெரிந்தநாளிலே வட்டக்காலாற் சிறந்த தேரினையுடைய வேந்தன் வெட்டிவிளங்கும் அழகிய வாளினது புறவீடு விடுதலையுணர்ந்து மாறுபட்டு உச்சிக்குப் பின்பன்றியும் பகைவருண்ணாட்டிடத்து உச்சிப்பொழுதும் கோட்டான் பாடாநிற்கும் எ - று. (4)
1. சிலப். 5 : 89-94, அடியார்.மேற். 2. புறநா.356 : 2; 362.17-8. |