வையகம் வணங்க வாளோச் சினனெனச் செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று (இ - ள்.) உலகத்துள்ளோர் தொழ வாளாலே வெட்டினானெனச் சொல்லிப் பண்ணின வீரக்கழலினையுடைய அரசனது 2நன்மையைப் பெருக்கச் சொல்லியது எ-று. (வ - று.) 3அழலடைந்த மன்றத் 4தலந்தயரா நின்றார் நிழலடைந்த நின்னையென் றேத்திக் -கழலடையச் செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக் செற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ. (இ - ள்.) நெருப்புப் பொருந்திய பகைவர் நாட்டு அம்பலத்து நொந்து அழியாநின்றவர் நின்னை நிழலாகச் சேர்ந்தேமென்று புகழ்ந்து சீபாதத்தை வந்துசேரச் சினத்தைப் பாராட்டிக் கோபித்து வந்தார்பட்டுத் தம்பெயர் கெட வெற்றியைப் பெற்று வேலை வலமாக உயர்த்தான்,வேந்து எ - று. (7)
1. சிலப்.25 :141. 2. தன்மை 3. நன்.சூ.440.மயிலை.மேற். 4. தரந்தயரா நின்றார் |