தொன்மரபின் வாட்குடியின் முன்னோனது நிலைகிளந்தன்று. (இ - ள்.) பழையவரலாற்றினையுடைத்தாய வாளினையுடைய மறக்குடியில் 2தமப்பனுடைய நிலைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) 3குளிறு முரசங் குணில்பாயக் கூடார் ஒளிறுவாள் வெள்ள முழக்கிக்-களிறெறிந்து புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும். (இ - ள்.) முழங்கும் வீரமுரசிலே கடிப்புத்தாக்கப் பகைவருடைய விட்டுவிளங்கும் வாள்வெள்ளத்தைத் துகைத்து யானையை வெட்டிப் புண்ணுடனே வந்தொழிந்தவனுடைய மகனுக்கு, பொலிந்த வீரக் கழலினையுடையோய்,மருதநிலங்களைக் கொடுத்தல் தக்கதாம் எ - று. மகனென்றமையால் அவன் தமப்பன் பட்டமை விளங்கும். (13)
1. தொல். புறத். சூ. 7, இளம். 2. தனப்பனுடைய 3. நன்.சூ . 458,மயிலை.மேற். |