நேராதார் வளநாட்டைக் கூரெரி கொளீஇயன்று. (இ - ள்.) பொருந்தாதாருடைய நல்ல தேசத்தை மிக்க நெருப்பைக் கொளுத்தியது எ-று. (வ - று.) 2அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ ஆடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார் நாட் டோடெரியுள் வைகின வூர். (இ - ள்.) வேலையொத்த விழியைப்புதைத்துப் பயப்பட்டுக் கூப்பிட்டு மயிலையொத்த குலமகளிர் மன்றென்று பாராதேசெல்ல,குயில்பாட, ஆளுலாவச் சுரும்பு ஒலிக்கும் தலைமையினையுடைய பகைவர் தேசத்து ஊர்கள் பரந்தோடும் நெருப்பினுள்ளே அவதரித்தன எ-று. (14)
1. எரிபரந்தெடுத்தல். 2. கள.29. |