2அழிகுநர் 3புறக்கொடை யயில்வா ளோச்சாக் கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று . (இ - ள்.) ஒருவீரன் தனக்குக் கெட்டோடுவார் 4முதுகுபுறத்துக் கூரிய வாளோச்சாத மிக்க மறப்பண்பை விரும்பிச்சொல்லியது எ-று. (வ - று.) கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும் தான்படை தீண்டாத் தறுகண்ணன் - 5வான்படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் 6எண்ணியபின் போக்குமோ வெஃகு . (இ - ள்.) காட்டிலே தோற்றின நெருப்புப்போலப் பகைவர் தன்னை மீதுர்ந்துவந்தாலும் ஆயுதந்தொடாத மறவன்றான் , பகைவர் சுவர்க்கலோகத்தே போதலைக்கருதி எதிரினல்லது அவ்வெகுண்டோர் முதுகிடுதல் கருதிய பின்பு ஓக்குவனோ வாளினை ? எ-று. (20)
1. குறள். 772-3, பரிமேல் . தழிச்சுதல் தழிஞ்சி யென்பர்; தொல். புறத். சூ. 8, ந. 2. குறள். 776, பரிமேல் . 3. அகநா. 4 : 5; புறநா. 8 : 7. 4. முதுகுப்புறத்து. 5. பு. வெ. 47. 6. எண்ணியபினோக்குமோ. |