59. நல்லிசை வஞ்சி
ஒன்னாதார் முனைகெடவிறுத்த
1வென்வேலாடவன் விறன்மிகுத்தன்று .

(இ - ள்.) சத்துருக்கள் வேற்றுப்புலம் அழியவிட்ட வென்றி வேலினை யுடையவன் வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ-று.

(வ - று.)
2மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல்
இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங்கெரிபோல்
வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற்
செல்லப் பெருகுஞ் சினம் .

(இ - ள்.) சிங்கம்போற்கோபித்து மாறுபட்டெதிர்ந்தார் நிலத்தின் மேல் வெளிதூரப் படையெடுத்துப் போய்விட்டபின்பும் அசைந்தெரியும் நெருப்புப்போலச் சயிக்க வளரும் சேனையினையுடைய அரசனுக்குப் பகைமன்னர்மேல் எடுத்துச்செல்ல மிகாநிற்கும் கோபம் எ-று.

3வென்றோர் விளக்கங் கூறியது.

(24)

1. பு - வெ. 62; மணி. 21 : 5.
2. கலி. 2 : 3; புறநா. 71 : 1.
3. தொல். புறத். சூ. 8.