வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன் காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று . (இ - ள்.) வெவ்விய சினத்தையுடைய வேற்றுமன்னன் வந்துவிட அரசன் காஞ்சியென்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைந்தது எ-று. (வ - று.) 2அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப் பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன் காஞ்சி மலையைக் கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில் . (இ - ள்.) செருமுனையிற்படப் பொருவாரில்லாதபடியாலே முன்பு ஏறுதற்கரிய மலையேறி விழுந்தானும் சாவேமென்னும் வீரர் , இக்காலம் இப்பெரிய மலையிடத்துச் சீறூரைக் காப்பான்வேண்டி நினைந்து பூசல் விருப்பத்தை யுடையோன் காஞ்சிப்பூவைச் சூட அணியிட்டு நிற்குமதுவோ , குற்றத்தைப்பண்ணும் வீரர் வினை ? எ-று. ஓகாரம் : எதிர்மறை . (1)
1. சிலப். 26 : 191 . 2. புறநா. 31 : 6, குறிப்புரையைப் பார்க்க . |