61. 1காஞ்சி
வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று .

(இ - ள்.) வெவ்விய சினத்தையுடைய வேற்றுமன்னன் வந்துவிட அரசன் காஞ்சியென்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைந்தது எ-று.

(வ - று.)
2அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப்
பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன்
காஞ்சி மலையைக் கடைக்கணித்து நிற்பதோ
தோஞ்செய் மறவர் தொழில் .

(இ - ள்.) செருமுனையிற்படப் பொருவாரில்லாதபடியாலே முன்பு ஏறுதற்கரிய மலையேறி விழுந்தானும் சாவேமென்னும் வீரர் , இக்காலம் இப்பெரிய மலையிடத்துச் சீறூரைக் காப்பான்வேண்டி நினைந்து பூசல் விருப்பத்தை யுடையோன் காஞ்சிப்பூவைச் சூட அணியிட்டு நிற்குமதுவோ , குற்றத்தைப்பண்ணும் வீரர் வினை ? எ-று.

ஓகாரம் : எதிர்மறை .

(1)

1. சிலப். 26 : 191 .
2. புறநா. 31 : 6, குறிப்புரையைப் பார்க்க .