73. தலையொடு முடிதல்
மண்டமருண் மாறாமைந்திற்
கொண்டான்றலையொடு கோல்வளை முடிந்தன்று .

(இ - ள்.) உற்றபூசலின் ஓவாதவலியினையுடைய கைப்பிடித்தான் தலையுடனே திரண்ட வளையினையுடையாள் இறந்தது எ-று.

(வ - று.)
1கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன்
தலையானா டையலாள் கண்டே - முலையால்
முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே
உயங்கினா ளோங்கிற் றுயிர்.

(இ - ள்.) கொலைத்தொழிலையமையாத கூற்றம் சாலக் கொடிதாயிருந்தது; கணவனது தலையை அமையாளாய்த் தையலானவள் பார்த்தே கொங்கையாலே தழுவினாள்; ஒளிசிறந்த வதனத்தையும் கூட்டினாள்; அவ்விடத்தே வருந்தினாள்; மேலே பறிந்தது உயிர் எ-று.

ஆதலால் கூற்றம் கொடிதேயென்க .

(13)

1. தொல். புறத். சூ. 19, இளம். மேற். கம்ப. முதற்போர். 236.