74. 1மறக்காஞ்சி
இலைப்பொலிதா ரிகல்வேந்தன்
மலைப்பொழிய 2மறங்கடைஇயன்று .

(இ - ள்.) பச்சிலையாலே பொலிவுபெற்ற மாலையாற்சிறந்த வலியினையுடைய மன்னன் பகைவர் மாறுபாடு நீங்க மறத்தொழிலைச் செலுத்தியது எ-று.

(வ - று.)
கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்
பருந்தோ டெருவை படர - அருந்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம் .

(இ - ள்.) கறுத்த தலையையும் வெள்ளைநிணத்தையும் சிவந்த தசையையும் இழுத்துக்கொண்டு பருந்தும் கழுகுஞ்செல்ல அரியவெற்றியினையுடைய பகைவர் அதிசயிப்பச்செலுத்தினான் நீங்காத கொடுவினையாளன் மறத்தொழிலை எ-று.

(14)

1. தொல். புறத். சூ. 19, இளம். மேற்.
2. மறங்கடாயின்று