வியன்மனைவிடலை புண்காப்பத் துயன்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று . (இ - ள்.) அகன்ற இல்லிலே தலைமகனுடைய புண்ணைப் பரிகரிக்க நான்றமுலையினையும் பெரியவாயினையுமுடைய பேய்மகள் புண்ணைத் தீண்டியது எ-று. (வ - று.) கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய் நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச் - சென்றொருத்தி ஒட்டார் படையிடந்த வாறாப்பு ணேந்தகலம் தொட்டாள் பெருகத் துயில் . (இ - ள்.) கூரியவேலினை உடையவனைக் கிட்டி மிக்க இருளின்கண்ணே நின்று கோபித்துப் பார்த்து அழலைக் கான்று அணுகப்போய் ஒரு பேய்மகள் பகைவர் ஆயுதம் பிளந்த தீராத புண்ணைத் தாங்கின மார்பினைத் தீண்டினாள், உறக்கம் மிக எ-று. உறக்கமிகுதல் - உயிர்போதல் . (18) |