80. 1மன்னைக் காஞ்சி
வியலிடமருள விண்படர்ந்தோன்
இயல்பேத்தி யழிபிரங்கின்று .

(இ - ள்.) அகன்ற பூமியினுள்ளார் மயங்க வீரசுவர்க்கத்தே சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது எ-று.

(வ - று.)
2போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன்
ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் - யார்க்கும்
அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல்
நிறந்திறந்த நீளிலை வேல் .

(இ - ள்.) பூசலுக்குத் தெப்பமனையவன் , உயர்ந்தோர்க்குத் தாணு வொப்பானவன் , தன் பதிக்கும் பூமிக்கும் ஓருயிரை யனையவன் யாவர்க்கும் தருமந்தோன்றின வாயிலை யடைத்தது; தலைவன் மருமத்தை வெளிசெய்த நீண்ட இலைத்தொழிலாற் சிறந்தவேல். எ-று.

(20)

1. தொல். புறத். சூ. 24; புறநா. 235.
2. தொல். வேற்றுமையியல் , சூ. 15, ந. மேற்.