88. ஊர்ச்செரு
அருமிளையொடு கிடங்கழியாமைச்
செருமலைந்த சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) பகைவராற் புகுதற்கரிய காவற்காட்டோடு அகழி சிதையாதபடி பூசல்செய்த மதிப்பினைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி
இளையுங் கிடங்குஞ் சிதையத் - தளைபரிந்த
நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர்
ஆனா ரமர்விலக்கி யார்ப்பு.

(இ - ள்.) சங்கும் கொம்யும் முழங்க வாளையோச்சிக் காவற்காடும் அகழுமழியக் காவற்பிணியை யறுத்த பகைவரான உழிஞையார் வேனைகெட நொச்சியிடத்து வெற்றிவீரர் ஆனார் , போரைவிலக்கி ஆரவாரிப்பு எ-று.

ஆரவாரிப்பு ஆனாரென்க .

(3)

1. பு.வெ.130