ஐந்தாவது நொச்சிப்படலம் (சூத்திரம் 5.) | நுவலருங் காப்பி னொச்சி யேனை மறனுடைப் பாசி யூர்ச்செரு வென்றா செருவிடை வீழ்த றிண்பரி மறனே எயிலது போரே யெயிறனை யழித்தல் | 5 | அழிபடை தாங்கன் மகண்மறுத்து மொழிதலென எச்ச மின்றி யெண்ணிய வொன்பதும் நொச்சித் 1திணையுந் துறையு மாகும். |
என் - னின், நொச்சித்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நொச்சி, மறனுடைப்பாசி, ஊர்ச்செரு, செருவிடை வீழ்தல், குதிரைமறன், எயிற்போர், எயிறனையழித்தல், அழிபடைதாங்கல், மகண் மறுத்து மொழிதல் எனச் சொல்லப்பட்ட இவ்வொன்பதும் நொச்சித் திணையும் துறையுமாம் எ - று. 86. நொச்சி ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று. (இ - ள்.) ஏவறையையுடைய முடக்குக்களைத் தாங்கின நிலைமையினை யுடைய எயில்காக்கும் வீரர் மலைந்த பூவைப் புகழ்ந்தது எ - று. (வ - று.) ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச் - சூடினார் உச்சி மதி 2வழங்கு மோங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர். (இ - ள்.) ஆடும் பாம்பையணிந்தான் நெருப்பு நுகரக் கோபித்த திரிபுரத்தைக்காக்கும் அவுணர்திரளையொப்ப மலைந்தார், மேலே திங்களூரும் உயர்ந்த புரிசையைக் காவல்செய்வான்வேண்டி நொச்சிப் பூவை, 3நுனையாற் சிறந்த வேலினையுடையவர் எ - று. வேலவர் நொச்சி சூடினாரென்க. (1) 87. மறனுடைப் பாசி மறப்படை மறவேந்தர் துறக்கத்துச் செலவுரைத்தன்று.
(பி-ம்.)1. 'திணையது வகையெனமொழிப' 2. 'தவழும்' 3. 'நுனி' |