பக்கம் எண் :

126. தொகைநிலை

எம்மதிலி னிகல்வேந்தரும்
அம்மதிலி னடியடைந்தன்று.

(இ - ள்.) எல்லா அரணிடத்துமுள்ள மாறுபாட்டு மன்னர் பலரும் அந்த எயிலிடத்தே அவன் பாதத்தைச் சேர்ந்தது எ - று.

வ - று. நாவல் பெயரிய ஞாலத் தடியடைந்
தேவ லெதிரா திகல்புரிந்த - காவலர்
வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்
முன்னின் றவிந்தார் முரண்.

(இ - ள்.) சம்புத்தீவினுள் அவன் தாள்நிழலையடைந்து சொன்ன சொல்லை ஏற்றுக்கொள்ளாது மாறுபாட்டை மேற்கொண்ட மன்னர் சிலைவலிநின்ற சேனையாற் சிறந்த வெற்றியை வேண்டுவோற்கு அவன் சூழ்ந்த அரணின் முன்னே நின்று கெட்டார், மாறுபாடு எ - று.

நாவல் பெயரியஞாலம் - நாவலின் பெயர்பெற்றபூமி; சம்புத்தீவு

(32)

உழிஞைத்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு முப்பத்தொன்றும் முடிந்தன.

ஆறாவது உழிஞைப்படலம் முற்றிற்று.


ஏழாவது
தும்பைப்படலம்
(சூத்திரம் 7.)

துன்னருங் கடும்போர்த் தும்பை தும்பை யரவம்
தன்னிக ரில்லாத் தானை மறமே
யானை மறத்தொடு குதிரை மறமே
தார்நிலை தேர்மறம் பாணது பாட்டே
5 இருவருந் தபுநிலை யெருமை மறமே
ஏம வெருமை நூழி லென்றா
நூழி லாட்டே முன்றேர்க் குரவை
பின்றேர்க் குரவை பேய்க்குர வையே
களிற்றுட னிலையே யொள்வா ளமலை
10தானை நிலையே வெருவரு நிலையே
சிருங்கார நிலையே யுவகைக் கலுழ்ச்சி
தன்னை வேட்ட றொகைநிலை யுளப்பட
நன்பொரு டெரிந்தோர் நாலிரு மூன்றும்
வண்பூந் தும்பை வகையென மொழிப.

என்-னின், தும்பைத்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.