எட்டாவது வாகைப்படலம் (சூத்திரம் 8.) | சீர்சால் வாகை வாகை யரவம் அரச வாகை முரச வாகை மறக்கள வழியொடு களவேள் விய்யே முன்றேர்க் குரவை பின்றேர்க் குரவை | 5 | பார்ப்பன வாகை வாணிக வாகை வேளாண் வாகை பொருந வாகை அறிவன் வாகை தாபத வாகை கூதிர்ப் பாசறை வாடைப் பாசறை அரச முல்லை பார்ப்பன முல்லை | 10 | அவைய முல்லை கணிவன் முல்லை மூதின் முல்லை யேறாண் முல்லை வல்லாண் முல்லை காவன் முல்லை பேராண் முல்லை மறமுல் லையே குடைமுல் லையொடு கண்படை நிலையே | 15 | அவிப்பலி யென்றா சால்பு முல்லை கிணைநிலை யேனைப் பொருளொடு புகறல் அருளொடு நீங்க லுளப்படத் தொகைஇ மூன்று 1தலையிட்ட மூவீ ரைந்தும் வான்றோய் வாகைத் திணையது வகையே. |
என் - னின், வாகைத்திணையும்துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வாகை, வாகையரவம், அரசவாகை,முரசவாகை, மறக்களவழி, களவேள்வி, முன்றேர்க்குரவை,பின்றேர்க்குரவை, பார்ப்பனவாகை, வாணிக வாகை, வேளாண்வாகை, பொருநவாகை அறிவன்வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, அரசமுல்லை, பார்ப்பனமுல்லை, அவையமுல்லை, கணிவன்முல்லை, மூதின்முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண்முல்லை, காவன்முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடைமுல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் என்று சொல்லப்பட்ட முப்பத்துமூன்றும் வாகைத் திணையும்துறையுமாம் எ-று. 155. வாகை இலைபுனை வாகை சூடி யிகன்மலைந் தலைகடற் றானை யரசட் டார்த்தன்று.
(பி - ம்) 1. 'தலைப்பட்ட' |