கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழ னிரை. (இ - ள்.) புல்லை மேய்ந்து இளைப்பாறி இனத்துடன் கூடித் தம்மில் ஒக்கப்போவனவாகவென்று சொல்லாநின்றான், வில்லின்மேல் வைத்த கையினையும் வெல்லும் வீரக் கழலினையுமுடையவன்; தன்மேலே செந்தூக்கான மலையினின்றும் விழாநின்ற நீர்போல் முடுகிவருங்கரந்தையாரைக் கண்டும், நீண்ட வரையினது நீழலிலே ஆனிரையை எ - று. ஆனிரையைப் புணர்ந்துடன் செல்கென்னுமெனக் கூட்டுக. (11) 12. தலைத்தோற்றம் உரவெய்யோ னினந்தழீஇ வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று. (இ - ள்.) வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மனமகிழ்ந்தது எ - று. வ - று.1மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லும் மையணற் காளை மகிழ்துடி - 2கையணல் வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட உய்த்தன் றுவகை யொருங்கு. (இ - ள்.) செறிந்த அலை தாடியையுடைய பசுநிரை முன்னேபோகப் பின்னே வரும் மயிராற் கறுத்த கபோலத்தினையுடைய காளை மகிழ்ந்து கொட்டுந்துடி நிரைகொண்டுவரப் போன வெட்சியாருடைய நிலைமையை அறியாது வெறுப்பினாற் கையைக் கதுப்பிலேவைத்த வேட்டுவிச்சியர் வாள் போன்ற கண் இடந்துடிப்பச் செலுத்திற்று, பிரியத்தை, பலர்க்கு மொக்க எ - று. மகிழ்துடி ஒருங்கு உய்த்தன்றென்க. மகிழ்துடி : வினைத்தொகை. (12) 13. தந்துநிறை வார்வலந்த துடிவிம்ம ஊர்புகல நிரையுய்த்தன்று. (இ - ள்.) வாராலே கட்டின துடி கறங்க ஊரினுள்ளார் விரும்ப ஆனிரையை மன்றத்திடத்துச் செலுத்தியது எ- று. வ - று.3தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள் அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி 4மணிநிரை மல்கிய மன்று.
1. தொல். புறத். சூ. 3, ந.மேற். 2. சீவக. 2050. 3. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 4. புறநா. 387 : 24. |