கடவுள் வாழ்த்து
 
நடை ஊறு சொல் மடந்தை நல்குவதும் நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடை ஊறும்
சேனைமுகத் தாள் இரியச் சீறு முகத்து ஊறு மதத்து
ஆனை முகத்தானை நினைத்தால்.

கண் அவனைக் காண்க, இரு காது அவனைக் கேட்க, வாய்ப்
பண் அவனைப் பாட, பதம் சூழ்க, - எள் நிறைந்த
நெய் ஒத்து நின்றானை நீல மிடற்றானை என்
கை ஒத்து நேர் கூப்புக.

உரை