சிறப்புப் பாயிரம்
 
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்,
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண் தமிழ் தா இன்று உணர்ந்த
துன்ன அருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும், பாங்கு உறப் பகர்ந்த,
பன்னிரு படலமும் பழிப்பு இன்று உணர்ந்தோன்;
ஒங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்,
ஐயனாரிதன் அகல் இடத்தவர்க்கு,
மை அறு புறப்பொருள் வழாலின்று விளங்க,
வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்,
பண்புஉற மொழிந்தனன், பான்மையில் தெரிந்தே.
உரை