கரந்தைப் படலம்
 
2. கரந்தைப் படலம்
கதம் மலி கரந்தை , கரந்தை அரவம்,
அதரிடைச் செலவே, அரும் போர் மலைதல்,
புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல்,
ஆள்எறி பிள்ளை , பிள்ளைத் தெளிவே,
பிள்ளை ஆட்டொடு , கையறு நிலையே,
நெடுமொழி கூறல் , பிள்ளைப் பெயர்ச்சி,
வேத்தியல் மலிபே , மிகு குடி நிலை, என
அருங்கலை உணர்ந்தோர் , அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப.
உரை
   
கரந்தை
22. மலைத்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று.
உரை
   
கரந்தை அரவம்
23. நிரைகோள் கேட்டுச் செய் தொழில் ஒழிய.
விரைவனர் குழூஉம் வகை உரைத்தன்று
உரை
   
அதரிடைச் செலவு
24. ஆற்றார் ஒழியக் கூற்று எனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று.
உரை
   
போர் மலைதல்
25. வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உறழ் செருப் புரிந்தன்று.
உரை
   
புண்ணொடு வருதல்
26. மண்ணோடு புகழ் நிறீஇப்,
புண்ணோடு தான் வந்தன்று.
உரை
   
போர்க்களத்து ஒழிதல்
27. படைக்கு ஓடா விறல் மறவரைக்
கடைக்கொண்டு, களத்து ஒழிந்தன்று.
உரை
   
ஆள்எறி பிள்ளை
28. வருவாரை எதிர்விலக்கி,
ஒரு தான் ஆகி ஆள் எறிந்தன்று.
உரை
   
பிள்ளைத் தெளிவு
29. கண் மகிழ்ந்து துடிவிம்மப்
புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று.
உரை
   
பிள்ளை ஆட்டு
30. கூடலர் குடர் மாலை சூட்டி,
வேல் திரித்து விரும்பி ஆடின்று.
உரை
   
கையறுநிலை
31. வெருவரும் வாள் அமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று.
உரை
   
நெடுமொழி கூறல்
32. மன் மேம்பட்ட மதிக் குடையோற்குத்
தன் மேம்பாடு தான் எடுத்து உரைத்தன்று.
உரை
   
பிள்ளைப் பெயர்ச்சி
33. போர் தாங்கிப் புள் விலங்கியோனைத்
தார்வேந்தன் தலையளித்தன்று.
உரை
   
வேத்தியல் மலிபு
34. தோள் வலிய வய வேந்தனை,
வாள் வலி மறவர் சிறப்பு உரைத்தன்று.
உரை
   
குடி நிலை
35. மண் திணி ஞாலத்துத் தொன்மையும் , மறனும்,
கொண்டு பிறர் அறியும் குடி வரவு உரைத்தன்று.
உரை