வஞ்சிப் படலம்
 
3. வஞ்சிப் படலம்
வாடா வஞ்சி , வஞ்சி அரவம்,
கூடார்ப் பிணிக்கும் குடை நிலை , வாள் நிலை,
கொற்றவை நிலையே, கொற்ற வஞ்சி,
குற்றம் இல் சிறப்பின் கொற்ற வள்ளை,
பேர் ஆண் வஞ்சி , மாராய வஞ்சி,
நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி,
உழபுல வஞ்சி , மழபுல வஞ்சி,
கொடையின் வஞ்சி, குறுவஞ்சிய்யே,
ஒருதனி நிலையொடு , தழிஞ்சி , பாசறை,
பெருவஞ்சிய்யே , பெருஞ்சோற்று நிலையொடு,
நல்லிசை வஞ்சி என நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி இருபத்தொன்றும்
வஞ்சியும் , வஞ்சித் துறையும் , ஆகும்.
உரை
   
வஞ்சி
36. வாடா வஞ்சி தலை மலைந்து,
கூடார் மண் கொளல் குறித்தன்று.
உரை
   
வஞ்சி அரவம்
37. வள் வார் முரசமொடு வயக் களிறு முழங்க
ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று.
உரை
   
குடை நிலை
38. பெய் தாமம் சுரும்பு இமிரப் பெரும் புலவர் புகழ் பாடக்
கொய் தார் மன்னவன் குடை நாள் கொண்டன்று.
உரை
   
வாள் நிலை
39. செற்றார் மேல் செலவு அமர்ந்து,
கொற்ற வாள் நாள் கொண்டன்று.
உரை
   
கொற்றவை நிலை
40. நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரிக்
கூடாரைப் புறம் காணும் கொற்றவை நிலை உரைத்தன்று.
உரை
   
41. மைந்து உடை ஆடவர் செய் தொழில் கூறலும்,
அந்தம் இல் புலவர் அது என மொழிப.
உரை
   
கொற்ற வஞ்சி
42. வையகம் வணங்க வாள் ஓச்சினன் எனச்
செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று.
உரை
   
கொற்ற வள்ளை
43. மன்னவன் புகழ் கிளந்து,
ஒன்னார் நாடு அழிபு இரங்கின்று.
உரை
   
பேராண் வஞ்சி
44. கேள் அல்லார் முனை கெடுத்த,
மீளியார்க்கு மிக உய்த்தன்று.
உரை
   
45. அருந்திறை அளப்ப ஆறிய சினத்தொடு
பெரும் பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே.
உரை
   
மாராய வஞ்சி
46. மற வேந்தனில் சிறப்பு எய்திய
விறல் வேலோர் நிலை உரைத்தன்று.
உரை
   
நெடுமொழி வஞ்சி
47. ஒன்னாதார் படை கெழுமித்
தன் ஆண்மை எடுத்து உரைத்தன்று
உரை
   
முதுமொழி வஞ்சி
48. தொல் மரபின் வாள் குடியின்
முன்னோனது நிலை கிளந்தன்று.
உரை
   
உழபுலவஞ்சி
49. நேராதார் வள நாட்டைக்
கூர் எரி கொளீஇயன்று.
உரை
   
மழபுல வஞ்சி
50. கூடார் முனை கொள்ளை சாற்றி
வீடு அறக் கவர்ந்த வினை மொழிந்தன்று.
உரை
   
கொடை வஞ்சி
51. நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று.
உரை
   
குறு வஞ்சி
52. மடுத்து எழுந்த மற வேந்தர்க்குக்
கொடுத்து அளித்துக் குடி ஓம்பின்று.
உரை
   
இதுவுமது
53. கட்டூரது வகை கூறினும்
அத் துறைக்கு உரித்தாகும்.
உரை
   
ஒரு தனி நிலை
54. பொரு படையுள் கல்சிறை போல்,
ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று.
உரை
   
தழிஞ்சி
55. அழிகுநர் புறக்கொடை அயில் வாள் ஒச்சாக்
கழி தறுகண்மை காதலித்து உரைத்தன்று.
உரை
   
பாசறை நிலை
56. மதிக்குடைக் கீழ் வழி மொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும்
பதிப்பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று.
உரை
   
பெரு வஞ்சி
57. முன் அடையார் வள நாட்டைப்
பின்னர் உடன்று எரி கொளீஇயன்று.
உரை
   
பெருஞ் சோற்று நிலை
58. திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவர் எனப்,
பெருஞ்சோறு ஆடவர் பெறும்முறை வகுத்தன்று.
உரை
   
நல் இசை வஞ்சி
59. ஒன்னாதார் முனை கெட இறுத்த
வென்வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று.
உரை
   
இதுவுமது
60. இறுத்தபின் அழிபு இரங்கல்
இறுத்து உரைப்பினும் அத்துறை ஆகும்.
உரை