நொச்சிப் படலம்
 
5. நொச்சிப் படலம்
நுவல் அருங் காப்பின் நொச்சி , ஏனை
மறனுடைப் பாசி, ஊர்ச்செரு என்றா,
செருவிடை வீழ்தல் , திண் பரிமறனே,
எயிலது போரே, எயில்தனை அழித்தல் ,
அழிபடை தாங்கல் , மகள் மறுத்து மொழிதல், என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும் , துறையும், ஆகும் .
உரை
   
நொச்சி
86. ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
காப்போர் சூடிய பூப் புகழ்ந்தன்று.
உரை
   
மறனுடைப் பாசி
87. மறப்படை மற வேந்தர்
துறக்கத்துச் செலவு உரைத்தன்று.
உரை
   
ஊர்ச் செரு
88. அரு மிளையொடு கிடங்கு அழியாமைச்
செரு மலைந்த சிறப்பு உரைத்தன்று .
உரை
   
செருவிடை விழ்தல்
89. ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று.
உரை
   
குதிரை மறம்
90. ஏமாண்ட நெடும் புரிசை
வா மானது வகை உரைத்தன்று.
உரை
   
எயிற் போர்
91. அயில் படையின் அரண் காக்கும்,
எயில் படைஞர் இகல் மிகுத்தன்று.
உரை
   
எயில்தனை அழித்தல்
92. துணிவு உடைய தொடு கழலான் ,
அணி புரிசை அழிவு உரைத்தன்று.
உரை
   
அழிபடை தாங்கல்
93. இழிபு உடன்று இகல் பெருக,
அழி படை அரண் காத்தன்று.
உரை
   
மகள் மறுத்து மொழிதல்
94. வெம் முரணான் மகள் வேண்ட,
அம் மதிலோன் மறுத்து உரைத்தன்று.
உரை