தொடக்கம் |
வாகைப் படலம்
|
|
|
| 8. வாகைப் படலம் | | சீர்சால் வாகை , வாகை அரவம், அரச வாகை , முரச வாகை, மறக்கள வழியொடு , கள வேள்விய்யே, முன்தேர்க் குரவை , பின்தேர்க் குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை , வாணிக வாகை, அறிவன் வாகை, தாபத வாகை, கூதிர்ப் பாசறை, வாடைப் பாசறை, அரச முல்லை , பார்பான் முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதில் முல்லை,ஏறு ஆண் முல்லை, வல் ஆண் முல்லை,காவல் முல்லை, பேர் ஆண் முல்லை , மற முல்லையே, குடை முல்லையொடு , கண்படை நிலையே, அவிப்பலி என்றா , சால்பு முல்லை, கிணைறிலை , ஏனைப் பொருளொடு புகறல், அருளொடு நீங்கல், உளப்படத் தொகைஇ, மூன்று தலை இட்ட மூ-ஈர்-ஐந்தும் வான் தோய் வாகைத் திணையது வகையே. |
|
உரை
|
|
|
|
|
| வாகை | 155. | இலை புனை வாகை சூடி, இகல் மலைந்து, அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வாகை அரவம் | 156. | வெண்கண்ணியும் கருங்கழலும் செங்கச்சும் தகை புனைந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| அரச வாகை | 157. | பகல் அன்ன வாய்மொழி இகல் வேந்தன் இயல்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| முரச வாகை | 158. | ஒலி கழலான் அகல் நகருள் பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| மறக்கள வழி | 159. | முழவு உறழ் திணி தோளானை உழவனாக உரை மலிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கள வேள்வி | 160. | அடு திறல் அணங்கு ஆர விடு திறலான் களம் வேட்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| முன் தேர்க் குரவை | 161. | வென்று ஏந்திய விறல் படையோன் முன் தேர்க்கண் அணங்கு ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| பின் தேர்க் குரவை | 162. | பெய் கழலான் தேரின்பின் மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| பார்ப்பன வாகை | 163. | கேள்வியால் சிறப்பு எய்தியானை வேள்வியான் விறல் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வாணிக வாகை | 164. | செறு தொழிலின் சேண் நீங்கியான் அறு தொழிலும் எடுத்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வேளாண் வாகை | 165. | மேல் மூவரும் மனம் புகல வாய்மையான் வழி ஒழுகின்று. |
|
உரை
|
|
|
|
|
| பொருந வாகை | 166. | புகழொடு பெருமை நோக்கி யாரையும் இகழ்தல் ஓம்பு என எடுத்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| அறிவன் வாகை | 167. | புகழ் நுவல முக்காலமும் நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தாபத வாகை | 168. | தாபத முனிவர் தவத்தொடு முயங்கி ஓவுதல் அறியா ஒழுக்கு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கூதிர்ப் பாசறை | 169. | கூற்று அனையான் வியன் கட்டூர்க் கூதிர் வான் துளி வழங்க, ஆற்றாமை நனிபெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வாடைப் பாசறை | 170. | வெந்திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த வந்து உலாய்த் துயர் செய்யும் வாடையது மலிபு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| அரச முல்லை | 171. | செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல் இரு நிலம் காவலன் இயல்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பார்ப்பன முல்லை | 172. | கால் மலியும் நறுந் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும் நான் மறையோன் நலம் பெருகும் நடுவு நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| அவைய முல்லை | 173. | நவை நீங்க நடுவு கூறும் அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கணிவன் முல்லை | 174. | துணிபு உணரும் தொல் கேள்விக் கணிவனது புகழ் கிளந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| மூதில் முல்லை | 175. | அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் , அவ் இல் மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஏறு ஆண் முல்லை | 176. | மாறு இன்றி மறம் கனலும் ஏறு ஆண் குடி எடுத்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வல் ஆண் முல்லை | 177. | இல்லும் பதியும் இயல்பும் கூறி நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| காவல் முல்லை | 178. | தவழ் திரை முழங்கும் தண் கடல் வேலிக் கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 179. | தக்காங்குப் பிறர் கூறினும் அத் துறைக்கு உரித்து ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| பேர் ஆண் முல்லை | 180. | உளம் புகல மற வேந்தன் களம் கொண்ட சிறப்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| மற முல்லை | 181. | வெள்வாள் வேந்தன் வேண்டியது ஈயவும் கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| குடை முல்லை | 182. | மொய் தாங்கிய முழு வலித் தோள் கொய் தாரான் குடை புகழ்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கண் படை நிலை | 183. | மண் கொண்ட மற வேந்தன் கண் படை நிலை மலிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| அவிப் பலி | 184. | வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது உள்ளா மைந்தர் உயிர்ப் பலி கொடுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| சால்பு முல்லை | 185. | வான் தோயும் மலை அன்ன சான்றோர்தம் சால்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கிணை நிலை | 186. | தண் பணை வயல் உழவனைத் தெள் கிணைவன் திருந்து புகழ் கிளந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பொருளொடு புகறல் | 187. | வையகத்து விழைவு அறுத்து மெய்யாய பொருள் நயந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| அருளொடு நீங்கல் | 188. | ஒலி கடல் வையகத்து நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று. |
|
உரை
|
|
|
|