வாகைப் படலம்
 
8. வாகைப் படலம்
சீர்சால் வாகை , வாகை அரவம்,
அரச வாகை , முரச வாகை,
மறக்கள வழியொடு , கள வேள்விய்யே,
முன்தேர்க் குரவை , பின்தேர்க் குரவை,
பார்ப்பன வாகை, வாணிக வாகை,
வேளாண் வாகை , வாணிக வாகை,
அறிவன் வாகை, தாபத வாகை,
கூதிர்ப் பாசறை, வாடைப் பாசறை,
அரச முல்லை , பார்பான் முல்லை,
அவைய முல்லை, கணிவன் முல்லை,
மூதில் முல்லை,ஏறு ஆண் முல்லை,
வல் ஆண் முல்லை,காவல் முல்லை,
பேர் ஆண் முல்லை , மற முல்லையே,
குடை முல்லையொடு , கண்படை நிலையே,
அவிப்பலி என்றா , சால்பு முல்லை,
கிணைறிலை , ஏனைப் பொருளொடு புகறல்,
அருளொடு நீங்கல், உளப்படத் தொகைஇ,
மூன்று தலை இட்ட மூ-ஈர்-ஐந்தும்
வான் தோய் வாகைத் திணையது வகையே.
உரை
   
வாகை
155. இலை புனை வாகை சூடி, இகல் மலைந்து,
அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று.
உரை
   
வாகை அரவம்
156. வெண்கண்ணியும் கருங்கழலும்
செங்கச்சும் தகை புனைந்தன்று.
உரை
   
அரச வாகை
157. பகல் அன்ன வாய்மொழி
இகல் வேந்தன் இயல்பு உரைத்தன்று.
உரை
   
முரச வாகை
158. ஒலி கழலான் அகல் நகருள்
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று.
உரை
   
மறக்கள வழி
159. முழவு உறழ் திணி தோளானை
உழவனாக உரை மலிந்தன்று.
உரை
   
கள வேள்வி
160. அடு திறல் அணங்கு ஆர
விடு திறலான் களம் வேட்டன்று.
உரை
   
முன் தேர்க் குரவை
161. வென்று ஏந்திய விறல் படையோன்
முன் தேர்க்கண் அணங்கு ஆடின்று.
உரை
   
பின் தேர்க் குரவை
162. பெய் கழலான் தேரின்பின்
மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று.
உரை
   
பார்ப்பன வாகை
163. கேள்வியால் சிறப்பு எய்தியானை
வேள்வியான் விறல் மிகுத்தன்று.
உரை
   
வாணிக வாகை
164. செறு தொழிலின் சேண் நீங்கியான்
அறு தொழிலும் எடுத்து உரைத்தன்று.
உரை
   
வேளாண் வாகை
165. மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி ஒழுகின்று.
உரை
   
பொருந வாகை
166. புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்பு என எடுத்து உரைத்தன்று.
உரை
   
அறிவன் வாகை
167. புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று.
உரை
   
தாபத வாகை
168. தாபத முனிவர் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஒழுக்கு உரைத்தன்று.
உரை
   
கூதிர்ப் பாசறை
169. கூற்று அனையான் வியன் கட்டூர்க் கூதிர் வான் துளி வழங்க,
ஆற்றாமை நனிபெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று.
உரை
   
வாடைப் பாசறை
170. வெந்திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த
வந்து உலாய்த் துயர் செய்யும் வாடையது மலிபு உரைத்தன்று.
உரை
   
அரச முல்லை
171. செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இரு நிலம் காவலன் இயல்பு உரைத்தன்று.
உரை
   
பார்ப்பன முல்லை
172. கால் மலியும் நறுந் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும்
நான் மறையோன் நலம் பெருகும் நடுவு நிலை உரைத்தன்று.
உரை
   
அவைய முல்லை
173. நவை நீங்க நடுவு கூறும்
அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று.
உரை
   
கணிவன் முல்லை
174. துணிபு உணரும் தொல் கேள்விக்
கணிவனது புகழ் கிளந்தன்று.
உரை
   
மூதில் முல்லை
175. அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் , அவ் இல்
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று.
உரை
   
ஏறு ஆண் முல்லை
176. மாறு இன்றி மறம் கனலும்
ஏறு ஆண் குடி எடுத்து உரைத்தன்று.
உரை
   
வல் ஆண் முல்லை
177. இல்லும் பதியும் இயல்பும் கூறி
நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று.
உரை
   
காவல் முல்லை
178. தவழ் திரை முழங்கும் தண் கடல் வேலிக்
கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று.
உரை
   
179. தக்காங்குப் பிறர் கூறினும்
அத் துறைக்கு உரித்து ஆகும்.
உரை
   
பேர் ஆண் முல்லை
180. உளம் புகல மற வேந்தன்
களம் கொண்ட சிறப்பு உரைத்தன்று.
உரை
   
மற முல்லை
181. வெள்வாள் வேந்தன் வேண்டியது ஈயவும்
கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று.
உரை
   
குடை முல்லை
182. மொய் தாங்கிய முழு வலித் தோள்
கொய் தாரான் குடை புகழ்ந்தன்று.
உரை
   
கண் படை நிலை
183. மண் கொண்ட மற வேந்தன்
கண் படை நிலை மலிந்தன்று.
உரை
   
அவிப் பலி
184. வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது
உள்ளா மைந்தர் உயிர்ப் பலி கொடுத்தன்று.
உரை
   
சால்பு முல்லை
185. வான் தோயும் மலை அன்ன
சான்றோர்தம் சால்பு உரைத்தன்று.
உரை
   
கிணை நிலை
186. தண் பணை வயல் உழவனைத்
தெள் கிணைவன் திருந்து புகழ் கிளந்தன்று.
உரை
   
பொருளொடு புகறல்
187. வையகத்து விழைவு அறுத்து
மெய்யாய பொருள் நயந்தன்று.
உரை
   
அருளொடு நீங்கல்
188. ஒலி கடல் வையகத்து
நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று.
உரை