பொது இயல் படலம்
 
10. பொது இயல் படலம்
சீர்சால் போந்தை , வேம்போடு , ஆரே,
உன்ன நிலையே, ஏழக நிலையே,
கழல் நிலை , ஏனைக் கல் காண்டல்லே,
கல்கோள் நிலையே, கல் நீர்ப்படுத்தல்,
கல் நடுதல்லே, கல்முறை பழிச்சல்,
இல்கொண்டு புகுதல், என்ற பன்னிரண்டும்
பொது இயல் பால என்மனார் புலவர்.
உரை
   
போந்தை
240. கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பின்
புல வேல் வானவன் பூப் புகழ்ந்தன்று.
உரை
   
வேம்பு
241. விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி
சுரும்பார் முடி மிசைப் பூப் புகழ்ந்தன்று.
உரை
   
ஆர்
242. விறல் படை மறவர் வெஞ்சமம் காணின்
மறப் போர்ச் செம்பியன் மலைப் பூ உரைத்தன்று.
உரை
   
உன்ன நிலை
243. துன்ன அருஞ்சிறப்பின் தொடு கழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று.
உரை
   
ஏழக நிலை
244. ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன்
தாழ்வில் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று.
உரை
   
245. ஏந்து புகழ் உலகின் இளமை நோக்கான்
வேந்து நிற்றலும் , ஏழக நிலையே.
உரை
   
கழல் நிலை
246. அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில்
கடு முரண் வயவன் கழல் புனைந்தன்று.
உரை
   
கல் காண்டல்
247. ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்குக்
கானம் நீளிடைக் கல் கண்டன்று.
உரை
   
கல் கோள் நிலை
248. மண் மருளத் துடி கறங்க
விண் மேயாற்குக் கல் கொண்டன்று.
உரை
   
கல் நீர்ப் படுத்தல்
249. வண்டு சூழ் தாமம் புடையே அலம் வரக்
கண்டு கொண்ட கல் நீர்ப் படுத்தன்று.
உரை
   
இதுவுமது
250. ஓங்கிய கல் உய்த்து ஒழுக்கல்
ஆங்கு எண்ணினும் அத்துறை ஆகும்.
உரை
   
கல் நடுதல்
251. அவன் பெயர் கல் மிசைப் பொறித்துக்
கவின் பெறக் கல் நாட்டின்று.
உரை
   
கல் முறை பழிச்சல்
252. நிழல் அவிர் எழில் மணிப் பூண்
கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று.
உரை
   
இல் கொண்டு புகுதல்
253. வேத்து அமருள் விளிந்தோன் கல் என
ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று.
உரை