தொடக்கம் |
பொது இயல் படலம்
|
|
|
| 10. பொது இயல் படலம் | | சீர்சால் போந்தை , வேம்போடு , ஆரே, உன்ன நிலையே, ஏழக நிலையே, கழல் நிலை , ஏனைக் கல் காண்டல்லே, கல்கோள் நிலையே, கல் நீர்ப்படுத்தல், கல் நடுதல்லே, கல்முறை பழிச்சல், இல்கொண்டு புகுதல், என்ற பன்னிரண்டும் பொது இயல் பால என்மனார் புலவர். |
|
உரை
|
|
|
|
|
| போந்தை | 240. | கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பின் புல வேல் வானவன் பூப் புகழ்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வேம்பு | 241. | விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி சுரும்பார் முடி மிசைப் பூப் புகழ்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஆர் | 242. | விறல் படை மறவர் வெஞ்சமம் காணின் மறப் போர்ச் செம்பியன் மலைப் பூ உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| உன்ன நிலை | 243. | துன்ன அருஞ்சிறப்பின் தொடு கழல் மன்னனை உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஏழக நிலை | 244. | ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன் தாழ்வில் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 245. | ஏந்து புகழ் உலகின் இளமை நோக்கான் வேந்து நிற்றலும் , ஏழக நிலையே. |
|
உரை
|
|
|
|
|
| கழல் நிலை | 246. | அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில் கடு முரண் வயவன் கழல் புனைந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கல் காண்டல் | 247. | ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்குக் கானம் நீளிடைக் கல் கண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| கல் கோள் நிலை | 248. | மண் மருளத் துடி கறங்க விண் மேயாற்குக் கல் கொண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| கல் நீர்ப் படுத்தல் | 249. | வண்டு சூழ் தாமம் புடையே அலம் வரக் கண்டு கொண்ட கல் நீர்ப் படுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 250. | ஓங்கிய கல் உய்த்து ஒழுக்கல் ஆங்கு எண்ணினும் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| கல் நடுதல் | 251. | அவன் பெயர் கல் மிசைப் பொறித்துக் கவின் பெறக் கல் நாட்டின்று. |
|
உரை
|
|
|
|
|
| கல் முறை பழிச்சல் | 252. | நிழல் அவிர் எழில் மணிப் பூண் கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று. |
|
உரை
|
|
|
|
|
| இல் கொண்டு புகுதல் | 253. | வேத்து அமருள் விளிந்தோன் கல் என ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று. |
|
உரை
|
|
|
|