தொடக்கம் |
சிறப்பின் பொது இயல்
|
|
|
| சிறப்பின் பொது இயல் | | முதுபாலையே, சுரநடை,ஏனைத் தபுதார நிலையே, தாபத நிலையே, தலைப்பெயல் நிலையே, பூசல் மயக்கே, மாலை நிலையே , மூதானந்தம், ஆனந்தம்மே, ஆனந்தப் பையுள், கையறு நிலை , உளப்படப் பதினொன்றும், மையறு சிறப்பின் பொது இயல் பால. |
|
உரை
|
|
|
|
|
| முதுபாலை | 254. | காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த பூங்கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| சுரநடை | 255. | மூது அரில் நிவந்த முதுகழை ஆரிடைக் காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தபுதார நிலை | 256. | புனையிழை இழந்தபின் புலம்பொடு வைகி மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தாபத நிலை | 257. | குருந்து அலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக் கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று. |
|
உரை
|
|
|
|
|
| தலைப் பெயல் நிலை | 258. | இன் கதிர் முறுவல் பாலகன் என்னும் தன் கடன் இறுத்த தாய் தபுநிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பூசல் மயக்கு | 259. | பல் இதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப் புல்லிய பெருங்கிளைப் பூசல் கூறின்று. |
|
உரை
|
|
|
|
|
| | 260. | வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும் ஆய்ந்த புலவர் அது என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
| மாலை நிலை | 261. | கதிர்வேல் கணவனொடு கனை எரி முழுக மதி ஏர் நுதலி மாலை நின்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| மூதானந்தம் | 262. | கயல் ஏர் கண்ணி கணவனொடு முடிய, வியல் நெறிச் செல்வோர் வியந்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 263. | கொடியான் கூர்ங் கணை குளிப்பத் தன் தொழில் முடியான் அவிதலும் மூதானந்தம். |
|
உரை
|
|
|
|
|
| ஆனந்தம் | 264. | ஆடமைத் தோளி, விரிச்சியும் சொகினமும் வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 265. | தவப் பெரிய வெஞ்சமம் குறுகும் அவற்கு இரங்கினும் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| ஆனந்தப் பையுள் | 266. | விழுமம் கூர, வேய்த்தோள் அரிவை கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| கையறு நிலை | 267. | செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற உரைத்துக் கை சோர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 268. | கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத் துறை என்ப. |
|
உரை
|
|
|
|