தொடக்கம் |
காஞ்சிப் பொது இயல்
|
|
|
| காஞ்சிப் பொது இயல் | | மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி, பெருங் காஞ்சிய்யே , பொருள்மொழிக் காஞ்சி, புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு, முதுகாஞ்சிய்யொடு , காடுவாழ்த்து, உளப்பட மை அறு சீர்த்தி வரும் இரு - மூன்றும் பொய் தீர் காஞ்சிப் பொது இயல் பால. |
|
உரை
|
|
|
|
|
| முதுமொழிக் காஞ்சி | 269. | பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள் முடிபு உணரக் கூறின்று. |
|
உரை
|
|
|
|
|
| பெருங் காஞ்சி | 270. | மலை ஓங்கிய மா நிலத்து நிலையாமை நெறி உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பொருள் மொழிக் காஞ்சி | 271. | எரிந்து இலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| புலவர் ஏத்தும் புத்தேள் நாடு | 272. | நுழை புலம் படர்ந்த நோய் அறு காட்சி விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| முது காஞ்சி | 273. | தலை வரும் பொருளைத் தக்காங்கு உணர்த்தி நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| காடு வாழ்த்து | 274. | பல்லவர்க்கு இரங்கும் பாடு இமிழ் நெய்தல் கல்லென ஒலிக்கும் காடு வாழ்த்தின்று. |
|
உரை
|
|
|
|