காஞ்சிப் பொது இயல்
 
காஞ்சிப் பொது இயல்
மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி,
பெருங் காஞ்சிய்யே , பொருள்மொழிக் காஞ்சி,
புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு,
முதுகாஞ்சிய்யொடு , காடுவாழ்த்து, உளப்பட
மை அறு சீர்த்தி வரும் இரு - மூன்றும்
பொய் தீர் காஞ்சிப் பொது இயல் பால.
உரை
   
முதுமொழிக் காஞ்சி
269. பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிபு உணரக் கூறின்று.
உரை
   
பெருங் காஞ்சி
270. மலை ஓங்கிய மா நிலத்து
நிலையாமை நெறி உரைத்தன்று.
உரை
   
பொருள் மொழிக் காஞ்சி
271. எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று.
உரை
   
புலவர் ஏத்தும் புத்தேள் நாடு
272. நுழை புலம் படர்ந்த நோய் அறு காட்சி
விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று.
உரை
   
முது காஞ்சி
273. தலை வரும் பொருளைத் தக்காங்கு உணர்த்தி
நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று.
உரை
   
காடு வாழ்த்து
274. பல்லவர்க்கு இரங்கும் பாடு இமிழ் நெய்தல்
கல்லென ஒலிக்கும் காடு வாழ்த்தின்று.
உரை