பெண்பால் கூற்று
 
பெண்பால் கூற்று
காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.
உரை
   
காண்டல்
294. தேன் பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்பு ஏர் தோளி கண்டு சோர்ந்தன்று.
உரை
   
நயத்தல்
295. கல் நவில் திணிதோள் காளையைக் கண்ட
நல் நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று.
உரை
   
உட்கோள்
296. வண்டு அமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண்தொடி அரிவை உட்கொண்டன்று.
உரை
   
மெலிதல்
297. ஒன்றார் கூறும் உறு பழி நாணி,
மென் தோள் அரிவை மெலிவொடு வைகின்று.
உரை
   
மெலிவொடு வைகல்
298. மணிவளை நெகிழ, மா நலம் தொலைய,
அணியிழை மெலிவின் ஆற்றல் கூறின்று.
உரை
   
காண்டல் வலித்தல்
299. மை வரை நாடனை மடந்தை பின்னரும்
கை வளை சோரக் காண்டல் வலித்தன்று.
உரை
   
பகல் முனிவு உரைத்தல்
300. புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று.
உரை
   
இரவு நீடு பருவரல்
301. புலம்பொடு வைகும் பூங்குழை கங்குல்
கலங்கினேன் பெரிது எனக் கசிந்து உரைத்தன்று.
உரை
   
கனவின் அரற்றல்
302. ஒண்தொடி மடந்தை உரு கெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவின் அரற்றின்று.
உரை
   
303. பெய்வளை அவனொடு பேணிய கங்குல்
உய்குவென் வரின் என உரைப்பினும் அதுவே.
உரை
   
நெஞ்சொடு மெலிதல்
304. அம் சொல் வஞ்சி அல் இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்ற நிலை உரைத்தன்று.
உரை
   
இதுவுமது
305. வரி வளை நெகிழ்த்தோன் முன் செல வலித்தேன்
அரிவையர் அறிக என உரைப்பினும் அதுவே.
உரை