தொடக்கம் |
பெண்பால் கூற்று
|
|
|
| 12. பெருந்திணைப் படலம் பெண்பால் கூற்று | | வேட்கை முந்து உறுத்தல் , பின் நிலை முயறல், பிரிவிடை ஆற்றல் , வரவு எதிர்ந்து இருத்தல், வாராமைக்கு அழிதல் , இரவுத்தலைச் சேறல், இல்லவை நகுதல் , புலவியுள் புலம்பல், பொழுது கண்டு இரங்கல் , பரத்தையை ஏசல், கண்டு கண் சிவத்தல் , காதலில் களித்தல், கொண்டு அகம் புகுதல் , கூட்டத்துக் குழைதல், ஊடலுள் நெகிழ்தல் , உரை கேட்டு நயத்தல், பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல், பள்ளிமிசைத் தொடர்தல் , செல்க என விடுத்தல், என ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப் பெண்பால் கூற்றுப் பெருந்திணைப் பால. |
|
உரை
|
|
|
|
|
| வேட்கை முந்து உறுத்தல் | 306. | கைஒளிர் வேலவன் கடவக் காமம் மொய் வளைத் தோளி முந்துற மொழிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பின் நிலை முயறல் | 307. | முன் இழந்த நலன் நசைஇப் பின் நிலை மலைந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பிரிவிடை ஆற்றல் | 308. | இறை வளை நெகிழ இன்னாது இரங்கிப் பிறைநுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று. |
|
உரை
|
|
|
|
|
| வரவு எதிர்ந்து இருத்தல் | 309. | முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை வகை புனை வள மனை வரவு எதிர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வாராமைக்கு அழிதல் | 310. | நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட வடிவேல் அண்ணல் வாராமைக்கு அழிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இரவுத் தலைச் சேறல் | 311. | காண்டல் வேட்கையொடு கனை யிருள் நடுநாள் மாண்ட சாயல் மனை இறந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இல்லவை நகுதல் | 312. | இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| புலவியுள் புலம்பல் | 313. | நல வளை மடந்தை நல் தார் பரிந்து புலவி ஆற்றாள் புலம்புற்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| பொழுது கண்டு இரங்கல் | 314. | நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும் பொன்தொடி அரிவை பொழுது கண்டு இரங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| பரத்தையை ஏசல் | 315. | அணி வயல் ஊரனொடு அப்பு விழவு அமரும் பணிமொழி அரிவை பரத்தையை ஏசின்று. |
|
உரை
|
|
|
|
|
| கண்டு கண் சிவத்தல் | 316. | உறு வரை மார்பன் ஒள் இணர் நறுந்தார் கறுவொடு மயங்கிக் கண் சிவந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| காதலில் களித்தல் | 317. | மைவரை நாடன் மார்பகம் பொருந்திக் கைவிடல் அறியாக் காதலில் களித்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கொண்டு அகம் புகுதல் | 318. | காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக் கோதையால் பிணித்துக் கொண்டு அகம் புக்கன்று. |
|
உரை
|
|
|
|
|
| கூட்டத்துக் குழைதல் | 319. | பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றாக் கொய் தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஊடலுள் நெகிழ்தல் | 320. | நள்ளிருள் மாலை நடுங்கு அஞர் நலிய ஒள் வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| உரை கேட்டு நயத்தல் | 321. | துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் | 322. | கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| பள்ளிமிசைத் தொடர்தல் | 323. | மா இருங் கங்குல் மாமலை நாடனைப் பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| செல்க என விடுத்தல் | 324. | பா இருள் கணவனைப் படர்ச்சி நோக்கிச் சேயிழை அரிவை செல்க என விடுத்தன்று. |
|
உரை
|
|
|
|