இரங்கல் முதலிய மூன்றும் ஒருசார் பகற்குறியின் வகைகளாம் என்பது. |
|
|
தலைவன் பிரிந்துழித் தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கல் முதலிய நான்கும் ஒருசார் பகற்குறியின் விரிகளாம் என்பது. |
|
|
விலக்கல் முதலிய மூன்றும் பகற்குறி இடையீட்டுவகைகளாம் என்பது. |
|
|
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் முதலிய ஏழும் பிறவும் பகற்குறி இடையீட்டு விரிகளாம் என்பது. |
|
|
வேண்டல் முதலிய ஒன்பதும் இரவுக்குறி வகைகளாம் என்பது. |
|
|
இறையோன் இருட்குறி வேண்டல் முதலிய இருபத்தேழும் பிறவும் இரவுக்குறி விரிகளாம் என்பது. |
|
|
அல்லகுறி, வருந்தொழிற்கு அருமை என்று இரவுக்குறி இடையீடு இருவகைப்படும் என்பது. |
|
|
இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்துழித் தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் முதலிய பதினெட்டும் பிறவும் இரவுக்குறி இடையீட்டின் விரி என்பது. |
|
|
அச்சம், உவர்த்தல், ஆற்றாமை என்ற மூன்றும் வரைதல் வேட்கையின் வகைகள் என்பது.
|
|
|
பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி அறிந்தமை கூறல் முதலிய பதினெட்டும் பிறவும் வரைதல் வேட்கையின் விரி என்பது. |
|
|