முன்னிலை எனவும், முன்னிலைப் புறமொழி எனவும்
அறத்தொடுநிலை
இருவகைப்படும் என்பது. .... 160
கையறுதோழி கண்ணீர் துடைத்தல் முதலிய பதினொன்றும் பிறவும்
அறத்தொடு நிற்றலின் விரியாம் என்பது .... 161
போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்ற மூன்றும் களவு
வெளிப்பாட்டிற்கு உரிய கிளவித் தொகைகளாம் என்பது .... 162
போக்கு அறிவுறுத்தல் முதலாக உடன்போக்கு எட்டு வகைப்படும்
என்பது.
..... 163
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல் முதலாகிய பதினெட்டுக்
கிளவியும் உடன்போக்கின் விரியாம் என்பது. ..... 164
செவிலி புலம்பல் முதலிய ஐந்தும் கற்பொடு புணர்ந்த கவ்வையின்
வகைகளாம் என்பது. ..... 165
வினவிய பாங்கியின் உணர்ந்தகாலை இனையல் என்போர்க்கு எதிர்
அழிந்து மொழிதல் முதலிய இருபத்தொன்றும் பிறவும் கற்பொடு
புணர்ந்த கவ்வையின் விரியாம் என்பது. ..... 166
தெளித்தல் முதலிய நான்கும் மீட்சியின் விரியாம் என்பது. .... 167
தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல்
முதலாகக் கூறப்பட்ட ஆறும் மீட்சியின் விரியாம் என்பது. .... 168
தலைவியை உடன்போய் வரைந்து மீடற்கும் அவள் மனை வரைதற்கும்
தன்மனைவரைதற்கும், மீட்சியின் விரியில் செவிலிகூற்று ஒழிந்த ஐந்தும்
உரியவாம் என்பது. .... 169