பக்கம் எண் :

10 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     
13. நுவல்வழித்தோற்றத்திற்குச் செய்யுள்:-*

      “மொய்யண லாநிரை முன்செல்லப் பின்செல்லு
      மையணற் காளை மகிழ்துடி-கையணல்
      வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
      வுய்த்தன் றுவகை யொருங்கு”         [பு. வெ. வெட்சி. 12]

எனவரும். நுவல்வழித் தோற்றந் தமர்கவன்றுரைத்தனர் அவர் மகிழ்தற்குக்
காரணமான தோற்றரவு.

     
14. தந்து நிறைக்குச் செய்யுள்:-

      “தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த
      வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று-கண்டா
      ளணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி
      மணிநிரை மல்கிய மன்று”            [பு. வெ. வெட்சி. 13]
எனவரும்.

     
15. பாதீட்டிற்குச் செய்யுள்:-

      “ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்
      புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்-விள்வாரை
      மாறிட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
      கூறிட்டார் கொண்ட நிரை”           [பு. வெ. வெட்சி. 14]

எனவரும். ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற்
பாதீடாயிற்று.

      
16. உண்டாட்டிற்குச் செய்யுள்:-

       “இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி
       களிகொண்ட நோக்கங் கவற்றத்-தெளிகொண்ட
       வெங்கண் மலிய விளிவதுகொல் லேற்றார்மேற்
       செங்கண் மறவர் சினம்”             [பு. வெ. வெட்சி. 15]
எனவரும்.

      
17. உறுகொடைக்குச் செய்யுள்:-

       “அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண்
       வெங்கட்கு வீசும் விலையாகுஞ் - செங்கட்
       செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி
       வரிச்சிலையாற் றந்த வளம்”          [பு. வெ. வெட்சி. 16]
எனவரும்.

     * தலைத்தோற்றம் :- புறநா. 262.
     1 புறநா. 257, 258 முதலிய 5 செய்யுட்கள்