|
49. கோழிவென்றிக்குச்
செய்யுள்:-
“பாய்ந்து மெறிந்தும் படிந்தும் பலகாலுங்
காய்ந்தும்வாய்க் கொண்டுங் கடுஞ்சேவ-லாய்ந்து
நிறங்கொண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு”
[பு. வெ. ஒழிபு. 6]
எனவரும்.
50. தகர்வென்றிக்குச்
செய்யுள்:-
“அருகோடி நீங்கா தணைதலு மின்றித்
திரிகோட்ட மாவிரியச் சீறிப்-பொருகளம்
புக்கு மயங்கப் பொருது புறவாயை
நக்குமா நல்ல தகர்” [பு. வெ. ஒழிபு. 7]
எனவரும்.
51. யானைவென்றிக்குச் செய்யுள்:-
“கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட
குஞ்சரம் வென்ற கொலைவேழந்-துஞ்சா
துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்ற
னிழலையுந் தான்சுளிக்கு நின்று”
[பு. வெ. ஒழிபு. 8]
எனவரும். கஞ்சுகம் - அட்டி மதுரம்.
52. பூழ்வென்றிக்குச்
செய்யுள்:-
“சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற்
சொல்லும் பலவுள சொன்னபின்-வெல்லு
நலம்வர நாடி நடுங்காது நூற்கட்
புலவரா லாய்ந்தமைத்த பூழ்”
[பு. வெ. ஒழிபு. 9]
எனவரும். சொல்லுஞ்சுவட்டவர் - குறும்பூழாளிகள், சொல்லும் பலவுள
என்பது, தீற்றும் அரிசி
மந்திரம், பச்சிலை பிசைந்து தடவும் மந்திரம்,
செவியுளுறுத்தும் மந்திரம் முதலியவாம்.
53. சிவல்வென்றிக்குச் செய்யுள்:-
“ஒட்டியா ரெல்லா முணரார் புடைத்தபின்
விட்டோட வேண்டுமோ தண்ணுமை-விட்ட
சுவடேற்கு மாயிற் சுடரிழாய் சோர்ந்து
கவடேற்க வோடுங் களத்து” [பு. வெ. ஒழிபு. 10]
எனவரும்.
இ. வி. - 27 |