|
54. கிளிவென்றிக்குச்
செய்யுள்:-
“இலநா முரப்பதன்க ணெல்வளை நாணப்
பலநாட் பணிபதமுங் கூறிச்-சிலநாளுட்
பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப்
பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு”
[பு. வெ. ஒழிபு. 11]
எனவரும்.
55. பூவைவென்றிக்குச்
செய்யுள்:-
“புரிவொடு நாவினாற் பூவை புணர்த்துப்
பெரிய வரியவை பேசுந்-தெரிவளை
வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த
கிள்ளை கிளந் தவைகீண் டிட்டு”
[பு. வெ. ஒழிபு. 12]
எனவரும்.
56. குதிரைவென்றிக்குச்
செய்யுள்:-
“ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையுங்
கந்து மறமுங் கறங்குளைமா-முந்துற
மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
வேல்கொண்ட கண்ணாளை மீட்டு”
[பு. வெ. ஒழிபு. 13]
எனவரும். கதி-தாரை. சாரிமை-சுற்றுவரவு.
57. தேர்வென்றிக்குச்
செய்யுள்:-
“ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லுங்
கலி மணித் திண்டேராற் காளைக்-கலிமாப்
பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து
செலவொடு மண்டிலஞ் சென்று”
[பு. வெ. ஒழிபு. 14]
எனவரும்.
58. சூதுவென்றிக்குச்
செய்யுள்:-
“கழகத் தியலுங் கவற்றி னிலையு
மழகத் திருநுதலா ளாய்ந்து-புழகத்துப்
பாய வகையாற் பணிதம் பலவென்றா
ளாய வகையு மறிந்து”
[பு. வெ. ஒழிபு. 16]
எனவரும். பணிதம்-ஒட்டம்.
59. யாழ்வென்றிக்குச்
செய்யுள்:-
“பாலை படுமலை பண்ணி யதன்கூட்டங்
கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்-மேலைச் |