பக்கம் எண் :

102 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த
     வவையெலா மாக்கி யணங்கு”
                 [பு. வெ. ஒழிபு. 15]

எனவரும்.

    
60. பாடல்வென்றிக்குச் செய்யுள்:-

    
“வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
     வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்-கண்டறியக்
     கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா
     ழந்நரம்பு மச்சுவையு மாய்ந்து”
               [பு. வெ. ஒழிபு. 18]

எனவரும்.

    
61. ஆடல்வென்றிக்குச் செய்யுள்:-

    
“கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
     கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு-பெய்பூப்
     படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந்
     தொடுகழன் மன்னன் றுடி”
                    [பு. வெ. ஒழிபு. 17]

எனவரும்.

     62. பிடிவென்றிக்குச் செய்யுள்:-

    
“குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வா
     யவளொடு மாமையொப் பான-விவளொடு
     பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப்
     பேணிப் பெயர்ந்தாள் பிடி”
                   [பு. வெ. ஒழிபு. 19]

எனவரும். பிடிபோலப் பெயர்ந்தாடலிற் பிடிவென்றியாயிற்று. இனி இவ்வாறன்றி,

    
ஆண்பாற் கூற்று:-

நூற்பா

    
“காட்சி யையந் துணிவே யுட்கோள்
     பயந்தோர்ப் பழிச்ச னலம்பா ராட்ட
     னயப்புற் றிரங்கல் புணரா விரக்கம்
     வெளிப்பட விரத்த லெனவிவ் வொன்பது
     மாண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்”
           [பு. வெ. நூ. 14]

எனக்கூறி, இவற்றிற்கு முறையே எ - டு:-
 

[மருட்பா]
 

   1. “கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
     வரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும்பணைத்தோட்