பக்கம் எண் :

104 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

[மருட்பா]
 

     7. “பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்
        கருமழைக்கண் வெண்முறுவற் பேதை-திருமுலை
        புல்லும் பொறியி லேனுழை
        நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே”
                                               [நயப்புற்றிரங்கல். 7]
எனவும்,

 

[மருட்பா]


    
 8. “இணரார் நறுங்கோதை யெல்வளையாள் கூட்டம்
        புணராமற் பூச றரவு-முணராது
        தண்டா விழுப்படர் நலியவு
        முண்டா லென்னுயி ரோம்புதற் கரிதே”
     [புணராவிரக்கம். 8]
எனவும்,
 

[மருட்பா]
 

     9. “உரவொலி மூந்நீ ருலாய்நிமிர்ந் தன்ன
        கரவருங் காமங் கனற்ற-விரவெதிர
        முள்ளெயி றிலங்கு மூகிழ்நகை
        வெள்வளை நல்காள் விடுமென் னுயிரே”
                                            [வெளிப்பட விரத்தல். 9]
எனவும்,

பெண்பாற் கூற்று:-
 

[நூற்பா]
 

        “காண்ட னயத்த லுட்கோண் மெலிதன்
        மெலிவொடு வைகல் காண்டல் வலித்தல்
        பகன்முனி வுரைத்த லிரவுநீடு பருவரல்
        கனவி னரற்ற னெஞ்சொடு மெலிதல்
        பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்”
       [பு. வெ. நூ. 15.]

எனக்கூறி, இவற்றிற்கு முறையே எ - டு :-
 

[மருட்பா]
 

     1. “கடைநின்று காம னலியக் கலங்கி
        யிடைநின்ற வூரலர் தூற்றப்-புடைநின்ற
        வெற்கண் டிலனந் நெடுந்தகை
        தற்கண்ட னென்யான் கண்ட வாறே”
            [காண்டல். 1]

எனவும்,