பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]105

                            [மருட்பா]


 
       2. “கன்னவி றோளானைக் காண்டலுங் கார்க்குவளை
        யன்னவென் கண்ணுக் கமுதமா-மென்னை
        மலைமலிந் தன்ன மார்ப
        முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே”
            [நயத்தல். 2]

எனவும்,
                                      

                                                                      [மருட்பா]


 
       3. “உள்ள முருக வொளிவளையுங் கைநில்லா
        கள்ளவிழ் தாரானுங் கைக்கணையா-னெள்ளிச்
        சிறுபுன் மாலை தலைவரி
        னுறுதுய ரவலத் துயலோ வரிதே”
              [உட்கோள். 3]

எனவும்,
                                                 

                                                                      [மருட்பா]


 
       4. “குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்க
        ணரும்பிய வெண்முத் துகுப்பக்-கரும்புடைத்தோட்
        காதல்செய் காமங் கனற்ற
        வேதி லாளற் கிழந்தனெ னெழிலே”
             [மெலிதல். 4]

எனவும்,
                                                 

                                                                       [மருட்பா]


 
       5. பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோ
       ளிறைபுனை யெல்வளை யேக-நிறைபுணையா
       யாம நெடுங்கட னீந்துவேன்
       காம வொள்ளெரி கனன்றகஞ் சுடுமே”
                                            [மெலிவொடு வைகல். 5]
எனவும்,
                                                   

                          [மருட்பா]


 
       6. “வேட்டவை யெய்தி விழைவொழிதல் பொய்போலு
        மீட்டு மிடைமணிப் பூணானைக்-காட்டென்று
        மாமை பொன் நிறம் பசப்பத்
        தூமலர் நெடுங்கண் டுயிறுறந் தனவே”
                                             [காண்டல் வலித்தல் 6]
எனவும்,
 

                                                                         [மருட்பா]


 
       7. “தன்க ணளியவாய் நின்றேற்குத் தார்விடலை
        வன்கண்ண னல்கா னெனவாடு-மென்க