பக்கம் எண் :

106 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


        ணிடரினும் பெரிதா லெவ்வம்
        படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.”
        எனவும்,
                             [பகன் முவுரைத்தல். 7]
 

[மருட்பா]
 

     8. “பெண்மே னலிவு பிழையென்னாய் பேதுறீஇ
        விண்மே லியங்கு மதிவீலக்கி-மண்மே
        னினக்கே செய்பகை யெவன்கொ
        லெனக்கே நெடியை வாழிய ரிரவே.”
     [இரவு நீடுபருவரல். 8]

எனவும்,


[மருட்பா]
 

     9. “அயர்வொடு நின்றே னரும்படர் நோய்தீர
        நயவரும் பள்ளிமே னல்கிக்-கயவா
        நனவிடைத் தமியேன் வைகக்
        கனவிடைத் தோன்றிக் கரத்தனீ கொடிதே”
                                                 [கனவினரற்றல். 9]
 

[மருட்பா]
 

       “தோடவிழ்தார் யானுந் தொடர வவனுமென்
        பாடகச் சீறடியின் மேற்பணிய-நாடகமா
        வைகிய கங்கு றலைவரி
        னுய்குவெ னுலகத் தளியேன் யானே”
                                                [கனவினரற்றல். 10]
எனவும்,
 

[மருட்பா]
 

     10. “மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கட்
        செல்லா மொழிக செலவென்பாய்-நில்லாய்
        புனையிழை யிழந்த பூச
        னினையினு நினைதியோ வாழியென் நெஞ்சே”
                                           [நெஞ்சொடு மெலிதல். 11]
 

[மருட்பா]
 

        “நல்வளை யேக நலந்தொலைவு காட்டிய
        செல்லல் வலித்தேனச் செம்மன்முன்-பில்லாத
        வம்ப வுரையொடு மயங்கிய
        வம்பற் பெண்டிரு மறைகவெம் மலரே”
         [இதுவுமது 12.]

எனவும்,