பக்கம் எண் :

108 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


        செல்லாய் சிலம்பன் வருவதற்குச் சிந்தியா
        யெல்லாக நெஞ்ச மெதிர்”
            [வரவெதிர்ந்திருத்தல். 4]

எனவும்,

     5. “நுடங்கருவி யார்த்திழியு நோக்கருஞ் சார
        லிடங்கழி மான்மாலை யெல்லைத்-தடம்பெருங்கட்
        டாரார மார்பன் றமியே னுயிர் தளர
        வாரான்கொ லாடும் வலம்”
             [வாராமைக் கழிதல். 5]

எனவும்,

     6. “பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன்
        பிணையார மார்பம் பிணையத்-துணையாய்க்
        கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்கேன்
        வழிகாண மின்னுக வான்”
            [இரவுத்தலைச் சேறல். 6]

எனவும்,

     7. “முற்றா முலையார் முயங்க விதழ்குழைந்த
        நற்றா ரகல நகைதரலி-னற்றார்
        கலவே மெனநேர்ந்துங் காஞ்சிநல் லூர
        புலவேம் பொறுத்த லரிது”
              [இல்லவை நகுதல். 7]

எனவும்,

     8. “ஓங்கிய வேலான் பணியவு மொள்ளிழை
        தாங்காள் வரைமார்பிற் றார்பரிந்-தாங்கே
        யடும்படர் மூழ்கி யமைமென்றோள் வாட
        நெடும்பெருங்க ணீந்தின நீர்”        
[புலவியுட் புலம்பல். 8]

எனவும்,
 

     9. “இறையே யிறந்தன வெல்வளை யுண்க
       ணுறையே பொழிதலு மோவா-நிறையைப்
       பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை
       யுருகா வுயங்கு முயிர்”
               [பொழுது கண்டிரங்கல். 9]

எனவும்,


     10. “யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன்

        றேமுயங்கு பைந்தார் திரைமுயங்க-யாமுயங்க
        வெவ்வையர் சேரி யிரவு மிமைபொருந்தாக்
        கௌவை கருதிற் கடை”
               [பரத்தையையேசல். 10]

எனவும்,

     11. “கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பி
        னாடிய சாந்தி னணிதொடர்ந்து-வாடிய