பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]109

   

        தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்த
        கார்க்குவளை காலுங் கனல்”
          [கண்டுகண்சிவத்தல். 11]

எனவும்,

    
12. “காதல் பெருகிக் களிசெய்ய வக்களியாற்
        கோதையுந் தாரு மிடைகுழைய-மாதர்
        கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல்
        புலந்தாள் புலரியம் போது”
            [காதலிற் களித்தல். 12]

எனவும்,

    
13. “கண்டுகளித்துக் கயலுண்க ணீர்மல்கக்
        கொண்டகம் புக்காள் கொடியன்னாள்-வண்டினங்
        காலையாழ் செய்யுங் கருவரை நாடனை

        மாலையான் மார்பம் பிணித்து”       [கொண்டகம் புகுதல். 13]
 

எனவும்,

    
14. “மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பிற்
        றயங்கு புனலூரன் றண்டார்-முயங்கியும்
        பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னுங்
        கோதைசூழ் கொம்பிற் குழைந்து”
                                          [கூட்டத்துக் குழைதல். 14]

எனவும்,

    
15. “தெரிவின்றி யூடத் தெரிந்துநங் கேள்வர்
        பிரிவின்றி நல்கினும் பேணாய்-திரிவின்றித்
        துஞ்சே மெனமொழிதி தூங்கிருண் மான்மாலை
        நெஞ்சே யுடைய நிறை”
               [ஊடலுணெகிழ்தல். 15]
எனவும்,
 

     16. “ஆழ விடுமோ வலரொடு வைகினுந்

        தாழ்குர லேனற் றலைக்கொண்ட-நூழில்
        விரையாற் கமழும் விறன்மலை நாட
        னுரையாற் றளிர்க்கு முயிர்”
         [உரைகேட்டு நயத்தல். 16]

 

எனவும்,

 

     17. “அணிவரும் பூஞ்சிலம் பார்க்கு மடிமேன்

        மணிவரை மார்பன் மயங்கிப்-பணியவும்
        வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
        நிற்கென்றி வாழியர் நீ”

                                  [பாடகச்சீறடி பணிந்தபினிரங்கல். 17]

 

எனவும்,