பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]11


18. புலனறிசிறப்பிற்குச் செய்யுள்:-

   
 “இறுமுறை யெண்ணா திரவும் பகலுஞ்
     செறுமுனையிற் சென்றறிந்து வந்தார்-பெறுமுறையி
     னட்டுக் கனலு மயில்வேலோ யொன்றிரண்
     டிட்டுக் கொடுத்த லியல்பு” [பு. வெ. வெட்சி. 17]

எனவரும். புலனறிசிறப்பு - வெம்முனைநிலை உணர்த்தியோர்க்குத் தம்மினும்
மிக்க சிறப்புச்செய்தல்.

19. பிள்ளைவழக்கிற்குச் செய்யுள்:-

    
“புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
     பல்லா ரறியப் பகர்ந்தார்க்குச்-சொல்லாற்
     கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா நான்கு
     குடஞ்சுட் டினத்தாற் கொடு” [பு. வெ. வெட்சி. 18]

எனவரும். பிள்ளைவழக்கு - கரும்பிள்ளை நிமித்தங் கூறியார்க்கு விதந்து
கொடுத்தல்.

20. பெருந்துடிநிலைக்குச் செய்யுள்:-

  
 “முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வ
     ரெந்தைக்குத் தந்தை யிவனெனக்கு-வந்த
     குடியொடு கோடா மரபினாற் கின்னும்
     வடியுறு தீந்தேறல் வாக்கு” [பு. வெ. வெட்சி. 19]

எனவரும்.

21. கொற்றவை நிலைக்குச் செய்யுள்:-

 
  “ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
     கூளி மலிபடைக் கொற்றவை-மீளி
     யரண்முருங்க வாகோள் கருதி னடையார்
     முரண்முருங்கத் தான்முந் துறும்” [பு. வெ. வெட்சி. 20]

எனவரும்.


22. வெறியாட்டிற்குச் செய்யுள்:-

  
 “காணி லரனுங் களிக்குங் கழன்மறவர்
    பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண்-வாணுத
    றான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப
    வேன்முருகற் காடும் வெறி” [பு. வெ. வெட்சி. 21]

எனவரும். முருகு - நறுநாற்றம். (5)