|
2. “இன்றிப் படரோ டியானுழப்ப வைங்கணையான்
வென்றிப் பதாகை யெடுத்தானா-மன்றிற்
றனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக்
குனிமடன்மாப் பண்ணிமேல் கொண்டு [மடலூர்தல். 2]
எனவும்,
3. “வள்வாய்ந்து பண்ணுக திண்டேர் வடிக்கண்ணா
ளொள்வாள்போன் மாலை யுயல்வேண்டுங்-கள்வாய
தாதொடு வண்டிமிருந் தாம வரைமார்ப
தூதொடு வந்தேன் றொழ” [தூதிடையாடல். 3]
எனவும்,
4. “உள்ளத் தவலம் பெருக வொளிவேலோ
யெள்ளத் துணிந்த விருண்மாலை-வெள்ளத்துள்
தண்டா ரகலந் தழூஉப்புணையா நீநல்கி
னுண்டாமென் றோழிக் குயிர்” [துயரவற் குரைத்தல். 4]
எனவும்,
5. “ஆம்ப னுடங்கு மணிவளையு மேகின
கூம்பன் மறந்த கொழுங்கயற்கண்-காம்பி
னெழில்வாய்ந்த தோளி யெவனாங்கொல் கானற்
பொழிலெல்லா மீயும் புலம்பு” [கண்டுகை சோர்தல். 5]
எனவும்,
6. “பெரும்பணை மென்றோள் பிரிந்தாரெம் முள்ளி
வரும்பருவ மன்றுகொ லாங்கொல்-சுரும்பிமிரும்
பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரு
மாமயிலு மாலு மலை” [பருவமயங்கல். 6]
எனவும்,
“பொறிமயி லாலின பொங்க ரெழிலி
சிறுதுவலை சிந்தின சிந்த-நறிய
பவர்முல்லை தோன்றி பரியாம லீன்ற
வவர்வருங் காலமீ தன்று” [இதுவுமது. 7]
எனவும்,
7. “கயற்கூடு வாண்முகத்தாட் கண்ணிய நெஞ்ச
முயற்கூடு முன்னதாக் காணி-னுயற்கூடுங் |