|
காணா மரபிற் கடும்பகலுங் கங்குலு
நாணாளு மேயா நகை” [ஆண்பாற்கிளவி. 8]
எனவும்,
8. “வானத் தியலு மதியகத்து வைகலுங்
கானத் தியலு முயல்காணுந்-தானத்தி
னொள்வளை யோடவு முள்ளான் மறைந்துறையுங்
கள்வனைக் காணாதிவ் வூர்” [பெண்பாற் கிளவி. 9]
எனவும்,
9. “வெய்ய நெடிதுயிரா வெற்ப னளிநினையா
வைய நனிநீங்க வாடினாண்-மைய
லயன்மனைப் பெண்டிரோ டன்னைசொ லஞ்சி
வியன்மனையு ளாடும் வெறி” [வெறியாட்டு. 10]
எனவும்,
10. “அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையாய் தாநொடியும்
வஞ்சந் தெரியா மருண்மாலை-யெஞ்சேரிப்
பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரா
லெண்ணிய தென்கொலோ வீங்கு” [பாண்வரவுரைத்தல். 11]
எனவும்,
11. “பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூர
னிலவுரைக்கும் பூணவர் சேரிச்-செலவுரைத்து
வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ள
லெங்கட் கவன்றா ரெளிது” [பரத்தைகூறல். 12]
எனவும்,
12. “அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல்-சுரும்போ
டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ
முதிரு முலையார் முயக்கு” [விறலிகேட்பத் தோழிகூறல். 13]
எனவும்,
13. “உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
முளைத்த முறுவலர்க் கெல்லாம்-விளைத்த
பழங்க ளனைத்தாய்ப் படுகளி செய்யு
முழங்கும் புனலூரன் மூப்பு”
[விறலி தோழிக்கு விளம்பல். 14]
எனவும்,
|