|
14. “மாணலங் கொள்ளு மகிழ்நன் றணக்குமேற்
பேணலம் பெண்மை யொழிகென்பார்-காணக்
கலவ மயிலன்ன காரிகையார் சேரி
வலவ னெடுந்தேர் வரும்”
[பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல். 15]
எனவும்,
15. “தண்டா ரணியவாந் தையலார் சேரியுள்
வண்டார் வயலூரன் வைகினமை-யுண்டா
லறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு
[பிறர் மனைத்துயின்றமை விறலி கூறல். 16]
எனவும்,
16. “கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை
மரிய கழிகேண்மை மைந்த-தெரியின்
விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத்
தெளிந்தாரிற் றீர்வது தீது”
[குற்றிசை. 17]
எனவும்,
17. “பண்ணவாந் தீஞ்சொற் பவளத் துவர்ச்செவ்வாய்ப்
பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை-கண்ணவா
நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
தொன்னல முண்டார் தொடர்பு”
[குறுங்கலி. 18]
எனவும் எடுத்தோதி இவற்றை அகத்திணைப்புறமென்று கொண்டு
பொதுவியலுட்கூறுவாரும் உளர். அங்ஙனம்
ஆகாமை மேற்கூறிப் போந்த
வெட்சி, வஞ்சியென்னும் நூற்பாவுரையானுணர்க.
இரண்டாவது
புறத்திணையியல் முற்றிற்று.
___ |