|
2. படையியங்கரவத்திற்குச் செய்யுள்:-
“காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார்-காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே
யுளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு” [பு. வெ. கரந். 2]
எனவரும்.
3. பறவாப்புட்டெரிதற்குச் செய்யுள்:-
“வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் பறவாப்பு-ளுய்ந்த
நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை
வரையளவைத் தாவதா மண்” [தொல். புறத். 3. நச்]
எனவரும். பறவாப்புள், வெளிப்படை.
4. நடைவயிற் சேறற்குச் செய்யுள்:-
“சங்குங் கருங்கோடுந் தாழ்பீலிப் பல்லியமு
மெங்கும் பறையோ டெழுந்தார்ப்ப-வெங்க
லழற்சுரந் தாம்படர்ந்தா ரான்சுவட்டின் *மீதே
நிழற்கதிர்வேன் மின்ன நிரைத்து” [பு. வெ. கரந். 3]
எனவரும்.
5. நன்குணருசாவிற்குச் செய்யுள்:-
“நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம் பகர்ந்தோய்-நெடிது
மனக்குரிய காதல் வயவேந்தனென்று
நினக்குரிய வாக நிரை” [தொல். புறத். 3. நச்.]
எனவரும்.
6. புறத்திறைக்குச் செய்யுள்:-
நேரிசை யாசிரியப்பா
“இருநில மருங்கி னெப்பிறப் பாயினு
மருவின் மாலையோ வினிதே யிரவி
னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து
நாம்புறத் திறுத்தன மாகத் தாந்தாங்
கன்குரல் கேட்டன போல
நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே” [தகடூர். புற. 1251]
எனவரும்.
(பா - ம்.) * மேலே |