பக்கம் எண் :

14 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


7. திறப்படப்பொருதற்குச் செய்யுள்:-

   “
புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார்
   வலிச்சினமு மானமுந் தேசு-மொலிக்கு
   மருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்
   செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து” [பு. வெ. கரந். 4]

எனவரும்.

8. புண்ணொடு வருதற்குச் செய்யுள்:-

 
“வெங்குருதி மல்க விழுப்புண் *ணுகுதோறு
   மிங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும்-பைங்கண்
   ணினம்போக்கி நின்றா ரிகல்வாட்டி வேந்தன்
   மனம்போல வந்த மகன்” [பு. வெ. கரந். 5]

எனவரும்.

9. போர்க்களத் தொழிதற்குச் செய்யுள்:-

  “உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட
   நிரைப்பி னெடுந்தகை சென்றான்-புரைப்பின்
   றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கவரக்
   களப்பட்டான் றோன்றான் கரந்து” [பு. வெ. கரந். 6]

எனவரும்.

10. ஆளெறி பிள்ளைக்குச் செய்யுள்:-

 “பிள்ளை கடுப்பப் பிணப்பிறங்க வாளெறிந்து
  கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டா-ரெள்ளிப்
  பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளா
  னொருதனியே நின்றா னுளன்” [பு. வெ. கரந். 7]

எனவரும். ஆளெறிபிள்ளை, ஆளை எறியும் பிள்ளைத்தன்மையன்.

11. பிள்ளைத் தெளிவுக்குச் செய்யுள்:-

 “மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன்
  பூவா ளுறைகழியாப் போர்க்களத்து-ளோவான்
  றுடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின்
  றடியிரட்டித் திட்டாடு மாட்டு” [பு. வெ. கரந். 8]

எனவரும். இது கவந்தம் ஆடியது.

(பா - ம்.) * ணுகுதொறூஉ
செருவிடை வீழ்தலுமிது - புறநா. 271, 272.