பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]15


12. பிள்ளையாட்டிற்குச் செய்யுள்:-

   “மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
    கூட்டிய வெஃகங் குடர்மாலை-சூட்டியபின்
    மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
    வேறிரிய விம்முந் துடி”               [பு. வெ. கரந். 9]
எனவரும்.

13. கையறுநிலைக்குச் செய்யுள்:-

   “நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படையுழக்கித்
    தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான்-பூப்புனையு
    நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்
    கற்கொலோ சோர்ந்திலவெங் கண்”     [பு. வெ. கரந். 10]
எனவரும்.

14. நெடுமொழிகூறற்குச் செய்யுள்:- *

   “ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலங்கி
    வாளொடு வைகுவேன் யானாக-நாளுங்
    கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப்
    பிழிமது வுண்பார் பிறர்”              [பு. வெ. கரந். 11]
எனவரும்.

15. பிள்ளைப்பெயர்ச்சிக்குச் செய்யுள்:- 2

   “பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா
    தணங்கஞர்செய் தாளெறித னோக்கி-வணங்காச்
    சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே
    தலையளித்தான் றண்ணடையுந் தந்து”  [பு. வெ. கரந். 12]

எனவரும். தண்ணடை - மருதநிலம். பிள்ளை - காரிப்பிள்ளை.

16. வேத்தியன் மலிபிற்குச் செய்யுள்:-

   “அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற்
    கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்-தங்கிச்
    செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வா
    யுயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்”      [பு. வெ. கரந். 13]

எனவரும்.

* புறநா. 298.
  இது தன்மேம்பாட்டுரையணியுமாகும். [இ. வி. 666]
  புறநா. 259 புறநா. 286, 291