பக்கம் எண் :

30 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     3. வாணாட்கோடற்குச் செய்யுள்:-

    
“வாணாட் கொளலும் வழிமொழிந்துவந்தடையாப்
     பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணா
     ரணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப்
     பிணிகொள்பே யாடும் பெயர்த்து”
             [பு. வெ. உழி. 3]

எனவரும்.

    
4. கடைநாட்பௌவத்ததிர் முரசுழிஞைக்குச் செய்யுள்:-

    
“கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி
     யுதிரா மதிலு முளகொ-லதிருமாற்
     பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுண்
     மாக்கண் முரச மழை”
                       [பு. வெ. உழி. 4]

எனவரும்.


    
5. பற்றலர்மதில்கொளப் பரந்தெழுதானையொடு கொற்றவ
 னெழுதரு கொற்ற உழிஞைக்குச்
செய்யுள்:-

   
 “வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற் றண்ணளியான்
     கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தா-னள்ளாதா
     ரஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி
     மஞ்சிவரு ஞாயின் மதில்”                 
[பு. வெ. உழி. 5]

எனவரும்.

   
 6. மிகப்படுமூக்கமுதல் வேந்துறுதலில் அரண் அகப்படுமென்ற

அரசஉழிஞைக்குச் செய்யுள்:-

 

     “ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி
     யாக்க மவன்க ணகலாவால்-வீக்க
     நகப்படா வென்றி நலமிகு தாராற்
     ககப்படா வில்லை யரண்”
                    [பு. வெ. உழி. 6]

எனவரும்.

    
7. வண்ணமலர்த்தார் மன்னனைச் சோவெறி கண்ணனென்
றேத்திய *கந்தழியுழிஞைக்குச்
செய்யுள்:-

    
“அன்றெறிந் தானு மிவனா லரண்வலித்
     தின்றிவன் மாறா வெதிர்வார்யா-ரென்று

* கந்தழி - பற்றுக் கோடின்றிக் கட்புலனாகாப் பொருள்.