|
மடையார் மணிப்பூ ணடையாதரர் மார்பிற்
சுடராழி நின்றெரியச் சோ” [பு. வெ. உழி. 7]
எனவரும்.
8. இயங்கரண் அழித்தனன் இறையும் இது புனைந்தென
வயங்கிணருழிஞையை வழுத்துமுற்றுழிஞைக்குச்
செய்யுள்:-
“மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே
யியங்கரண மூன்று மெரித்தான்-றயங்கிணர்ப்
பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானு
மாக்கொ ளுழிஞை மலைந்து” [பு. வெ. உழி. 8]
எனவரும்.
9. காந்தள் வேய்ந்தனன் சேந்தனும்போர்க்கெனின் வேந்தரி
லெவர்பூ விரும்பாரென்றற்குச்
செய்யுள்:-
“குருகு பெயரிய குன்றெறிந் தானு
முருகெழு காந்தண் மலைந்தான்-பொருகழற்
கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப்
போர்கருதி யார்மலையார் பூ” [பு. வெ. உழி. 9]
எனவரும்.
10. மறத்துறைமலிந்து மண்டிமாற்றார் விறற்கொடி மதிலின்
புறத்தொருங்கிறுத்தற்குச் செய்யுள்:-
“புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
பல்லார் மருளப் படைபரப்பி-யொல்லார்
நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின்
புறத்திறுத்தான் பூங்கழலி னான்” [பு. வெ. உழி. 10]
எனவரும்.
11. வாஅண்மறவர் வணங்கார் வைகிய நீஇண்மதிலின்
நிலையெடுத்தியம்பற்குச் செய்யுள்:-
“மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக்
கயிற்கழலார் கண்கனல் பூப்ப-வெயிற்கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ
மாயப்போர் மன்னன் மதில்” [பு. வெ. உழி. 11]
எனவரும். |