|
16. விண்டோயருமிளைக் கடந்து குண்டகழிப்புறத்து
வந்திறுததற்குச்
செய்யுள்:-
“கோள்வாய் முதலிய குண்டகழி நீராக
வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தா-னீள்வாயி
லோங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப
வாங்கொ லரிய வமர்” [பு. வெ. உழி. 16]
எனவரும்.
17. போக்கருங்கிடங்கிற் பற்றலரொடுபொரூஉம் பாசிநிலைக்குச்
செய்யுள்:-
“நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதா
ரோவார் விலங்கி யுடலவும்-பூவா
ரகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்” [பு. வெ. உழி. 17]
எனவரும். பாசிநிலைபோல் ஒழிப்பவும் ஒழியாது பொருதலிற் பாசி
நிலையாயிற்று. நாவாய் -
ஓடம். தோணி - ஒரு மரத்தான் இயன்றது.
18. தொடுகழன்மறவர் துன்னித்துன்னார் இடுசூட்டிஞ்சியின் ஏணி
சார்த்தற்குச்
செய்யுள்:-
“கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும்-பொற்புடைய
பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சார்த்தினா
ரேணி பலவு மெயில்”
[பு. வெ. உழி. 18]
எனவரும். பாணிநடை - தாளத்திற்கொப்பச் சதிபாய்தல்.
19. ஆடுதலொல்லா அரண்காவலவர் ஈடறவேணியின்
இவரெயிற்பாசிக்குச்
செய்யுள்:-
“சுடுமண் ணெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுர ணெஃகங் கழிய-வடுமுர
ணாறினா ரன்றி யரவு முடும்பும்போ
லேறினா ரேணி பலர்” [பு. வெ. உழி. 19]
எனவரும். எயிலைப் பாசிபோல விடாதுபற்றி ஏறுதலின் எயிற்பாசியாயிற்று.
அடுதல், ஆடுதலென
விகாரமாய் நின்றது. |